தஞ்சையில் போட்டிக்கு போட்டியாக நடைபெற்ற போராட்டங்கள்

ஈஷா மையத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போட்டிக்கு போட்டியாக தஞ்சையில் நடைபெற்ற போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-03 10:30 GMT

தெய்வத் தமிழ் பேரவை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்.

ஈஷா மையத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போட்டிக்கு போட்டியாக தஞ்சையில் நடைபெற்ற போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும், ஜக்கி வாசுதேவ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் தமிழ் முறைப்படி பூசைகள் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெய்வ தமிழ் பேரவை சார்பாக இன்று காலை தஞ்சை பனகல் கட்டிடம் அருகே ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போட்டியாக இந்து மக்கள் கட்சியினர், தஞ்சை ரயில் நிலையத்தில் போராட்டத்தில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், ஈஷா மையம் என்பது மக்கள் சொத்தாகத்  தான் உள்ளது. ஈஷா மையம் மூலமாக ஏராளமான மரங்கள் நடப்பட்டு உள்ளதாகவும், அதனை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தான் தொடங்கி வைத்தார். மேலும் ஏராளமான மக்கள் பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழ் அர்ச்சனை என்பது பண்டைய காலம் முதல் நடைபெற்று வருகிறது. இவர்கள் எதுவும் புதிதாக செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News