தஞ்சை மாநகராட்சியில் இன்று 6 மையங்களில் தடுப்பூசி முகாம்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 6 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட, 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இன்று 5 மையங்களில் 650 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 100 நபர்களுக்குக்கும், அண்ணாநகர் பள்ளியில் 100 நபர்களுக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 100 நபர்களுக்கும், லட்சுமி நாராயணன் பள்ளியில் 100 நபர்களுக்கும், கரந்தை மாநகராட்சி பள்ளியில் 100 நபர்களுக்கும், சரஸ்வதி மாகால் நூலகத்தில் 150 நபர்களுக்கு என ஆறு மையங்களில் 650 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுகிறது. கோவாக்ஷீன் கையிருப்பு இல்லாததால் எந்த மையங்களிலும் செலுத்தப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.