தஞ்சையில் அமைச்சர்களுடன் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் துவங்கியது

தஞ்சையில் அமைச்சர்கள், விவசாயிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் துவங்கியது.

Update: 2021-05-16 05:30 GMT

டெல்டா மாவட்டங்களில் ஜீன்  12ம் தேதி தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்பொய்யா மொழி, சுற்றுலாதுறை அமைச்சர் மெய்யநாதன்  மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் தூர்வாரும் பணிகள், உர தேவை, விவசாய கடன்கன், தண்ணீர் திறப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது.

Tags:    

Similar News