கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு

தஞ்சை அருகே வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-04-26 16:00 GMT

தஞ்சை அருகே ராமநாதபுரம் வடக்கு மூப்பனார் தெரு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (65). இவரது மனைவி பரிமளா. இவர் வீட்டு வாசல் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த ஒருவர் வண்ணாரப்பேட்டை க்கு எப்படி செல்வது என்று கேட்டுள்ளார். அதற்கு பரிமளா வழியைக் காட்டும் பொழுது சட்டென்று அவரது கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க தாலி செயினை பைக்கில் வந்த மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இதன் மதிப்பு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கலியமூர்த்தி கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச் செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News