தஞ்சை அருகே நிலத்தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது
தஞ்சை அருகே நிலத்தகராறு தொடர்பாக தம்பி மற்றும் அவரது மனைவியை தாக்கிய அண்ணன், அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரணை.
தஞ்சை அருகே நிலத்தகராறு தொடர்பாக தம்பி மற்றும் அவரது மனைவியை தாக்கிய அண்ணன் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை அருகே குருங்குளம் நாகப்ப உடையான்பட்டி நடுத்தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் இளங்கோவன் (45). இவரது மனைவி சசிகலா. இளங்கோவனின் அண்ணன் சிவசங்கரன் (52). இவரது மகன் வீரமணி.
அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது இந்நிலையில் சம்பவத்தன்று சிவசங்கரன், வீரமணி இருவரும் சேர்ந்து இளங்கோவன் மற்றும் அவரது மனைவியிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.