தஞ்சை அருகே பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

தஞ்சை அருகே பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-02-28 12:45 GMT

தஞ்சை அருகே மேலவஸ்தாசாவடி, சக்தீஸ் நகரை சேர்ந்தவர் ரவிராஜா (50). இவர் தஞ்சையில் உள்ள ஒரு நகைக்கடையில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் இன்று வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் அதில் பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகைகள் மற்றும் சுமார் ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து ரவிராஜா தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ரேகைகளை பதிவு செய்தனர்.

போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News