தஞ்சையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.1.60 லட்சம் மதிப்பு தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-01-07 11:15 GMT

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.1.60 லட்சம் மதிப்பு தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் கமலகண்ணன் (35). கார் டிரைவர். இவரது மனைவி வித்யா (30). சம்பவத்தன்று இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 9 பவுன் தங்க நகை, 700 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.60 லட்சம் என்று கூறப்படுகிறது

இது குறித்து வித்யா தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News