ஆயுதபடை பெண் காவலர் தற்கொலை

தஞ்சாவூரில் ஆயுதப்படை பெண் காவலர் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-14 13:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா (23). இவருக்கும், தருமபுரியைச் சேர்ந்த வினோத்குமாருக்கும் திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவரும், குழந்தையும் தருமபுரியில் வசித்து வரும் நிலையில், பிரியா தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையம் அருகேயுள்ள காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், பிரியா தனது வீட்டில் மாலை மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியா தனது குழந்தையை தன்னுடைய தாய் வீட்டில் விடுமாறு வினோத்குமாரிடம் வலியுறுத்தி வந்தாராம். இதனால், ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News