பட்டுக்கோட்டை அருகே கை, கால்கள் துண்டிக்கப்பட்டு பச்சிளம் குழந்தை நரபலியா?

பட்டுக்கோட்டை அருகே கை, கால்கள் துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2022-05-11 07:21 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தையொட்டி, இன்று காலை பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கை, கால்கள் துண்டித்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றிய நிலையில் இந்த பச்சிளம் குழந்தையின் உடல் இங்கு எப்படி வந்தது? யார் கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றிருப்பார்கள்? என்ற கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டனர்.

இருந்தும் குழந்தையின் உடல் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கிடந்ததால் இது ரயில்வே போலீசார் கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ளது என்பதால் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் ரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Tags:    

Similar News