தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
தஞ்சை அருகே நாயக்கன்பட்டி அந்தோணியார் கோவில் அரிசனத் தெருவை சேர்ந்தவர் அன்புரோஸ் (63). இவர் புதுக்கோட்டை ரோடு ஆண்டாள் நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டி வந்த பைக் அன்புரோஸ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அன்புரோஸ் மகன் அலெக்ஸ் பாண்டியன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.