அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Update: 2022-01-19 10:37 GMT

அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சி கடந்த முறை 21 வார்டுகளைக் கொண்ட பேரூராட்சியாக இருந்து வந்த நிலையில், தற்போது அது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 27 வார்டுகளைக் கொண்ட நகராட்சியாக உருவானது. இந்நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வார்டு மறுசீரமைப்பில் இருபத்தி ஏழு வார்டுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த 14 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து ஜமாத்தார்கள் மற்றும் அ.தி.மு.க , விடுதலைச் சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ, த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், வார்டு ஒதுக்கீட்டை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News