நடிகர் சிவாஜி கணேஷனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள், ரசிகர்கள் அஞ்சலி
நடிகர் சிவாஜி கணேஷனின் 20 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ரசிகர்கள் அவரது திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையில் பிறந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.
எண்ணற்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்று விளங்கியவர். முதுமை காரணமாக கடந்த ஜீலை 2001 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில்,
அவரின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சோழமண்டல சிவாஜி பாசறை சார்பில், தஞ்சை மணி மண்டபம் பகுதியில் உள்ள சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச் சிலைக்கு, மாவட்ட தலைவர் சதா.வெங்கட்ராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிவாஜி பாசறை நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு சிவாஜி கணேஷனுக்கு மரியாதை செலுத்தினர்.