பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

Update: 2021-11-25 05:30 GMT

பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 வயது சிறுவன் அசாருதீன்.

பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் பலி பூதலூர் போலீசார் விசாரணை.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள சின்னமுத்தாண்டிப்பட்டியை சேர்ந்தவர் சலீம். இந்நிலையில் இரவு சலீம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இதற்கிடையே தொடர்ந்து பெய்து வந்த மழையால் சலீம் வீட்டின் சுவர்கள் ஈரத்தில் ஊறி போய் இருந்துள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சலீம் மகன் அசாருதீன் (வயது 5) இடிபாடுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மற்றவர்கள் உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த பூதலூர் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவன் அசாருதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News