தஞ்சாவூரில் வீட்டின் கதவு நிலை விழுந்து 8 வயது குழந்தை உயிரிழப்பு
தஞ்சாவூரில் வீட்டருகே விளையாடி காெண்டிருந்த 8 வயது குழந்தை கதவு நிலை விழுந்து உயிரிழந்தது.
தஞ்சாவூர், வடக்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், கொத்தனார். இவரது மனைவி மேகலா, இவர்களின் மகள் பிரீத்தி (8). இவர் நேற்று இரவு தன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அரவது வீட்டின் பக்கத்தில் புதியதாக கட்டும் வீட்டிற்காக முகப்பு கதவு நிலை வாங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த குழந்தை கதவு நிலையை பிடித்து தொங்கி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சுவற்றில் சாய்த்து வைத்திருந்த, கதவு நிலை சரிந்து பிரீத்தியின் தலையில் விழுந்ததில் படுகாயமடைந்தார். சத்தம் கேட்டு பெற்றோர்கள், மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.