640 குக்கர்கள் சோதனையில் பறிமுதல்

Update: 2021-03-19 02:32 GMT

தஞ்சாவூரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாலை திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், புதுக்குடி சோதனைச் சாவடியில் வணிகவரி துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கூரியர் பார்சல்களை கொண்டு வரும் லாரி சந்தேகத்திற்கிடமாக வந்ததை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட 640 குக்கர்கள் இருந்தது .

இது தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்த போது திருச்சியிலிருந்து திருவையாறுக்கு ஒரு பேக்கரி கடைக்கு கொண்டு செல்வதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பேக்கரி கடைக்கு ஏன் இவ்வளவு குக்கர்கள் கொண்டு செல்லப்படுகிறது என்ற கேள்விக்கு வாகனங்களில் வந்தவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

இதை அடுத்து லாரியையும், குக்கர்களையும் பறிமுதல் செய்து தஞ்சாவூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தஞ்சாவூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த குக்கர் 2 லட்சத்தி 68 ஆயிரம் மதிப்புடையது. ஏற்கனவே திருவையாறுக்கு 2 கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்ட குக்கர்கள் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News