தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்திய ரெய்டில் 30 ஆயிரம் பறிமுதல்
அலுவலகத்தில் உள்ளே மூன்று இடங்களிலும், இரண்டு புரோக்கரிடம் கணக்கில் வாரத 30 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்
தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வாரத 30 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் மதியம் 2:00 மணிக்கு அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தில் உள்ளே மூன்று இடங்களிலும், இரண்டு புரோக்கரிடம் கணக்கில் வாரத 30 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், இரண்டு புரோக்கர்களிடமும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் அலுவலக ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரித்துள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், டிராவல்ஸ், டிரைவிங் பள்ளி போன்ற பல்வேறு உரிமையாளர்கள் அதிகாரிகளுக்குப் பணம் கொடுப்பதாக கிடைத்த பேரில், அதிரடியாகச் சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர்.