பணபலத்தை நம்பியே அதிமுக உள்ளது- முத்தரசன்

Update: 2021-03-16 08:15 GMT

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் முழுக்க முழுக்க பண பலத்தை நம்பியே அதிமுக இருப்பதாக முத்தரசன் குற்றம் சாட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் மாநில குழு ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜக என்பது பேராபத்துக்குரிய கட்சியாகும். அதிமுக தலையில் சவாரி செய்து தமிழகத்தில் தடம் பதிக்க பாஜக முயற்சிக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

தமிழகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த அரசியல் போரை முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்த அவர், நடைபெற உள்ள இந்த தேர்தலில் முழுக்க முழுக்க சொந்த பலம், கூட்டணி பலம் என எதையும் நம்பாமல் பண பலத்தை மட்டுமே நம்பி அதிமுக இருப்பதாகவும், பணத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவில் தான் அவர்கள் உள்ளார்கள். தமிழ்நாட்டு மக்கள் இதை நிராகரிப்பார்கள். அதிமுகவின் கனவு பகல் கனவுதான் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News