கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் மறியல்

Update: 2021-02-23 10:00 GMT

தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் செய்தனர்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சட்டரீதியான ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து தஞ்சாவூர் இரயில் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

Similar News