குண்டர் சட்டத்தில் இரண்டு பேர் கைது

Update: 2021-01-29 04:30 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பூமால் ராவுத்தர் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ் (19) மற்றும் கீழ வண்டிக்கார தெருவை சேர்ந்த அப்பாஸ் (24) ஆகிய இருவரையும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் தஞ்சை கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமதாஸ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News