தஞ்சை அருகே விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சை பூதலூர் அருகே, நீர்நிலைகளில் உள்ள விளைநிலங்களை பொதுப்பணித்துறையினர் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-03 09:00 GMT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பில்,  அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில்,  பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே, மாரனேரி பகுதியில் நீர்நிலைகளில் உள்ள விவசாய நிலங்களை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அகற்ற உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 80 ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் விவசாயிகளை நீதிமன்ற உத்தரவால் வெளியேற்றக்கூடாது. காலம் காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயத்திற்க்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாரனேரி விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

Tags:    

Similar News