தென்காசியில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்

தென்காசி ரயில் நிலையம் முன்பு அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2022-06-24 06:02 GMT

தென்காசி ரயில் நிலையம் முன்பு அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி ரயில் நிலையம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதியன்று அக்னிபத் திட்டம் குறித்து அறிவித்தார் இளைஞர்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்வதே இந்த அக்னிபத் திட்டம் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணிக்காலம் முடிந்ததும் அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும். 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை பெற முடியும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடுகள் செய்யப்பட்டு 25 சதவீதம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று தென்காசி ரயில் நிலையம் முன்பு தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்தோஷ், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் கதிரவன், மாவட்ட துணைத்தலைவர் சங்கை கணேசன், புளியங்குடி நகர தலைவர் பால்ராஜ், தென்காசி நகர பொருளாளர் ஈஸ்வரன், சித்திக் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டிக்கும் விதமாக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News