தென்காசி நகராட்சியில் வேட்பாளர்களை ஆதரித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரச்சாரம்

தென்காசி நகராட்சியில் பாேட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் பிரச்சாரம்.

Update: 2022-02-06 06:19 GMT

தென்காசி நகராட்சியில் பாேட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் பிரச்சாரம் செய்தார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

தென்காசி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் 5 வார்டு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் காதர் மைதீன். இவர் 27 வது வார்டு பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இவர் இன்று 27 பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தங்கள் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற எனக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். பிரச்சாரத்தின் போது தென்காசி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News