தென்காசி மாவட்டத்தில் வரும் 31ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தென்காசி மாவட்டத்தில் 31 தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வர் பங்கேற்பு. விழா நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Update: 2022-05-22 12:41 GMT

தென்காசி மாவட்டத்தில் 31 தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டத்தில் 31 தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வர் பங்கேற்பு. விழா நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 31 தேதி பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்டம் வழங்கும் விழா தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். விழாவிற்கான மைதானத்தில் மாவட்ட ஆட்சியர்கோபாலசுந்தர ராஜ், தலைமையில் ஆய்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன், காங்கிரஸ் கட்சியை சார்ந்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, திமுக மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன், உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News