பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம்

பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-05-14 03:26 GMT

தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கும் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் அதிக அளவில் காய்கறிகள் விற்பனை எப்பொழுதும் நடைபெறுவது வழக்கம். இங்கு மார்க்கெட் நிர்வாகத்தின் சார்பில் கடையின் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் மார்க்கெட்டிற்கு வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சேர்த்து கீழப்பாவூர் சுகாதார நிலையத்தின் சார்பில் வட்டார மருத்துவர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் ஆர்வமுடன் கடை உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர். அதுமட்டுமின்றி கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பன பற்றிய விழிப்புணர்வும் கடை உரிமையாளர்களுக்கு கீழப்பாவூர் வட்டார சுகாதாரத் துறையின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.

Tags:    

Similar News