திருட்டில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் கைது

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Update: 2022-05-18 05:00 GMT

கைது செய்யப்பட்ட திருநங்கைகள்.

தென்காசி மாவட்டம் பூலாங்குடியிருப்பு சேர்ந்த மாரியப்பன் (வயது 55) என்பவரிடம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து சுமார் 18 கிராம் செயினை 2 திருநங்கைகள் திருடியதாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தென்காசி காவல் நிலையத்ததில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் பாலமுருகன்  தலைமையிலான தனிப்படையில் பெண் உதவி ஆய்வாளர் செல்வி மற்றும் பெண் மு.நி.கா. மலர்கொடி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு, செயினை திருடிய திருநங்கைகள் மாரி @ புஷ்பா ஸ்ரீ, மணிகண்டன் @ மதுபாலா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள 18 கிராம் தங்க செயின் மீட்கப்பட்டது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News