தென்காசி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தென்காசி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவாகி உள்ளன.

Update: 2021-10-06 08:30 GMT

குணராமநல்லூர் ஊராட்சியில் வாக்களித்த,  திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன்.

தென்காசி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பகல்  1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவாகி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய பகுதிகளில்,  40.65%, கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 39.05%, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 39.05% , மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 42.80%, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 38.05% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன், குணராமநல்லூர் ஊராட்சியில் வாக்களித்தார்.

திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன், அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர், குணராமநல்லூர் ஊராட்சியில் வாக்களித்தனர்.

Tags:    

Similar News