மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய தென்காசி போலீசார்

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு பெற்றோருடன் ஒப்படைத்து பிறந்தநாள் கொண்டாடிய தென்காசி காவல்துறையினர்.

Update: 2022-05-14 14:22 GMT

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு பெற்றோருடன் ஒப்படைத்து பிறந்தநாள் கொண்டாடிய தென்காசி காவல்துறையினர்.

தென்காசி பகுதியில் நேற்று வழக்கம்போல் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹவுசிங் போர்டு பகுதியில் சுற்றி கொண்டு இருந்த நபரை விசாரித்த போது எவ்வித முகவரியும் சொல்ல முடியாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மேக்கரை அன்பு இல்லம் மனநலம் காப்பகத்தில் ஒப்படைக்கபட்டது. 

தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் புகைப்படத்தையும் மற்றும் முகவரி தெரிய வேண்டியும் whatsapp மூலம் தெரிவிக்க what'sapp group ல் அனுப்பப்பட்டது. இன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் தந்தை மணிகண்டன் தாயார் தேவி ஆகியோர் whatsapp மூலம் தகவல் தெரிந்து தென்காசி காவல் நிலையம் வந்து விவரங்கள் கூற மனநிலை பாதிக்கப்பட்ட நபரின் பெயர் அருண் என்றும் பாளையங்கோட்டை ஊரில் இருந்து நேற்று காணவில்லை என கூறவே அருண் என்பவரை தென்காசி காவல் நிலையத்தில் வைத்து பெற்றோர் வசம் ஒப்படைக்கபட்டது.

அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட அருண் என்பவருக்கு இன்று பிறந்த நாள் என்று தெரிய வந்தவுடன் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி காவல் ஆய்வாளர் கற்பக ராஜா, செல்வி மற்றும் ஆளிநர்கள் அவருக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News