தென்காசி : வரும் 18-ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் 18ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மாவட்டஆட்சித் தலைவரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது 18.10.2021 திங்கள் கிழமை முதல் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.
மேற்படி ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூட்டத்திற்கு கோரிக்கை மனுக்களை அளிக்க வருகை தரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும் அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு சமூக இடைவெளியைக்கடைபிடிக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ்,செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.