தென்காசி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
தென்காசி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பழனி நாடார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக சட்ட மன்ற அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தது.
சட்ட மன்ற அலுவலகத்தை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ,திமுக பிரமுகரும், தெட்ஷனமாற நாடார் சங்க தலைவருமான காளிதாஸ் ஆகியோர் இணைந்து சட்டமன்ற அலுவலகத்தை திறந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காதர் மைதீன், நகர இளைஞரணித் தலைவர் சந்தோஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.