தென்காசி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணி: விண்ணப்பிக்க 17ம் தேதி கடைசிநாள்

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-11 04:26 GMT

தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பு பணிக்காக ஆறு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக மருந்தாளுநர்கள் ஆய்வக நுட்புனர் மற்றும் கதிர் வீச்சாளர்கள் என தலா 11 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதற்குரிய விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது அரசால் அங்கீகாரம் பெறப்பட்ட தனியார் கல்லூரிகளில் படித்த கல்விச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவங்களை தென்காசி இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் நேற்று முதல் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட்டு வருகின்றது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை வருகின்ற 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம், தென்காசி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் வைத்து நேர்முக தேர்வு நடைபெறும் இன்று தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News