வீரர் சுந்தரலிங்கம் பிறந்தநாள்- திமுக மரியாதை

Update: 2021-04-17 11:30 GMT

தென்காசியில், சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் சுந்தரலிங்கனாரின் 251-வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கத்தின் 251 - வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் திருவுருவ படத்திற்கு தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் .சிவபத்மநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து, திமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் என பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தென்காசி நகர செயலாளர் சாதிர், பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர்.ராஜா, விவசாய அணி துணை அமைப்பாளர் சாமித்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News