தென்காசியில் வரும் 4 ம் தேதி மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைத் தீர் முகாம்

Grievance Redressal Committee - மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைத் தீர்க்கும் முகாம் வருகின்ற 4 தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு.

Update: 2022-07-02 02:45 GMT

Grievance Redressal Committee -தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 04.07.2022 அன்று காலை 11:00 மணிக்கு நடைப்பெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்ததை சார்ந்த அனைத்து வகையான தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை-நகல், குடும்ப அட்டை-நகல், ஆதார் அடடை-நகல், வாக்காளர் அட்டை- நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News