தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட நபர் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது
Goondas Act Punishment -கமல் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதன் விளைவாக 2017 ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Goondas Act Punishment - தென்காசி காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட தென்காசி TNHB காலனியைச் சேர்ந்த துரையரசு என்பவரின் மகன் கமல் (27) என்பவர் மீது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் படி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கமல் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதன் விளைவாக 2017 ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் 2வது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2