தென்காசியில் பழனி நாடார் எம்எல்ஏ தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
தென்காசி சட்டமன்ற அலுவலகத்தில் பழனி நாடார் எம்எல்ஏ தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்தியா முழுவதும் 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார், சட்டமன்ற அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 73 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சந்தோஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.