குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கால் குளிக்கத் தடை

Courtallam Falls-மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-04 02:30 GMT

குற்றால அருவி.

Courtallam Falls- தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது தாமதமாக துவஙகியுள்ள சீசனில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகரித்த தொடர் சாரல் காரணமாக ஐந்தருவி, பிரதான அருவி ஆகிய அருவிகளில் திடீரென் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த சீசனில் தற்போது முதல் முறையாக அருவிகளில் அதிகமான தண்ணீர் வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கால் கல், மண், மரக்கட்டைகள் அடித்து வரப்படலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறையும் போது குளிக்க அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News