கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு
Chicken Poultry Farm- குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Chicken Poultry Farm- தென்காசி மாவட்டம் கல்லூரனி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் தனியார் ஒருவர் 500 கோழிகளை வளர்க்கும் அளவிற்கு கோழி பண்ணை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்பகுதியில் சிறுவர்கள், முதியவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கோழிப் பண்ணை அமைவதால் பறவை காய்ச்சல் போன்ற நோய்கள் எளிதில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் கோழி பண்ணை அமைக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2