டிச.20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி? குழப்பத்தில் சுற்றுலா பயணிகள்

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஆட்சியர் அனுமதி அளித்ததாக சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

Update: 2021-12-07 12:05 GMT

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் டிச.20ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஆட்சியர் அனுமதி அளித்ததாக சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.


அதில் பேரருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்க அனுமதி. ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்க அனுமதி. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியரின் கையொப்பம் பெறப்படவில்லை. மேலும் இதுதொடர்பாக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு முறையான தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News