கிராம நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

புளியங்குடி அருகே ஊர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Update: 2022-01-12 07:17 GMT

பாம்புக்கோவில் சந்தை பகுதி சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஊர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாம்புக்கோவில் சந்தை பகுதி சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பாம்புக்கோவில் சந்தை பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். சமுதாயத்தில் 2017 முதல் 2021 அக்டோபர் மாதம் வரையிலான கணக்கு மற்றும் பணத்தை ஒப்படைக்காமல் மணிகண்டன் மற்றும் மாரியப்பன் என்பவர்கள் ஏமாற்றி வருகின்றனர்.

மேலும் மடத்துப்பட்டி கிராமம் அருகே எங்கள் சமூகத்திற்கு சொந்தமான 12 சென்ட் நிலத்தை ரமேஷ் என்பவருக்கு 2019ஆம் ஆண்டு சிவகிரி பத்திரபதிவு அலுவலகத்தில் மோசடியாக பத்திர பதிவு செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு மனு அளித்தனர்.

Tags:    

Similar News