தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்: எஸ்பி பங்கேற்பு

தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-09 08:56 GMT

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டு, வாகன ஓட்டுநர் காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ்  தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர் காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News