கடையநல்லூர், சங்கரன்கோவிலில் சிறப்பு ரயில்களை நிறுத்த மதிமுக கோரிக்கை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் பகுதியில் சிறப்பு ரயில்களை நிறுத்த மதிமுக கோரிக்கை மனு.

Update: 2022-04-21 03:58 GMT

வைகோ எழுதியுள்ள கடிதத்தை தெற்கு இரயில்வே தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று அளித்த  வைகோவின் செயலாளர் செந்தமிழ்செல்வன்

தென்காசி மாவட்டம், கடையநல்லூர், சங்கரன்கோவில், பாம்புக்கோயில் சந்தை ஆகிய இரயில் நிறுத்தங்களில் புதிதாக இயக்கப்படும் நெல்லை - தாம்பரம் நெல்லை மேட்டுப்பாளையம் எர்ணாகுளம் - நாகூர், செங்கோட்டை தாம்பரம் இரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும் எனவும், இந்த இரயில்களை தினசரி இரயில்களாக இயக்கிட வேண்டும் எனவும் தெற்கு இரயில்வே மேலாளர் அவர்களுக்கு மதிமுக  வைகோ எம்.பி. அவசரக் கடிதம் மூலமும், அலைபேசி வழியாகவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த மூன்று இடங்களிலும் இரயில்கள் நின்று செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்து வைகோ எழுதியுள்ள கடிதத்தை  சென்னையில் உள்ள தெற்கு இரயில்வே தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று வைகோவின் செயலாளர் செந்தமிழ்செல்வன்,  முதன்மை தலைமை ஆபரேசன் மேலாளர் திருமதி ரீனோ இட்டியேரா, (PCOM) பயணிகள் போக்குவரத்து மேலாளர் (CPTM) சிவகுமார் IRTS ஆகியோரிடம் நேரில் வழங்கினார். 

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உயர் அலுவலர்கள் உறுதி அளித்தனர். 

Tags:    

Similar News