குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு: சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறை வேண்டுகோள்

Courtallam Falls -குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு காரணமாக சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2022-09-24 04:17 GMT

பைல் படம்

Courtallam Falls -குற்றாலம் இன்றைய நிலவரம் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை என்பது அதிக அளவு காணப்படுகிறது. குற்றாலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிற்றருவியில் முற்றிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஏமாற வேண்டாம் குற்றாலம் வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மெயினருவி புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் முற்றிலும் நீர்வரத்து குறைந்துள்ளது இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை என்பது அதிக அளவு காணப்படுகிறது. சிற்றருவியில் முற்றிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஏமாற வேண்டாம் என்று குற்றாலம் வனத்துறை சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர்



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News