கால்நடை வளர்ப்போருக்கு கிஸான் கடன் அட்டை வழங்கும் திட்டம்

தென்காசி மாவட்டத்தில், கால்நடைவளர்ப்போருக்கு கிஸான் கடன் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Update: 2021-11-29 11:00 GMT

தென்காசி மாவட்டத்தில்,  கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் நிதி ஆதாரங்களை பெருக்கும் விதமாக,  கிஸான் கடன் அட்டைகள் (Kisan Credit Card) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே, கால்நடை வளர்க்கும் விவசாயிகள்,  கிஸான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை,  புகைப்படம், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகத்தின்  முதல் பக்கம் ஆகியவற்றை இணைத்து, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவக்கிளை நிலையங்களில் அளிக்க வேண்டும்  என, மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News