தென்காசியில் புதிய விளையாட்டுகள் குறித்து புத்தாக்க பயிற்சி முகாம்

தென்காசி மாவட்டத்தில் புதிய விளையாட்டுகள் குறித்து புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-16 07:01 GMT

ஆய்க்குடி ஜேபி பொறியியல் கல்லூரியில் புதிய விளையாட்டுகள் குறித்த புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ‌தென்காசி மாவட்ட சார்பாக புதிய விளையாட்டுகளின் புத்தாக்க பயிற்சி முதன்மை கல்வி அலுவலர் கபீர் அவர்களின் வழிகாட்டிகளின்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கு ஆய்க்குடி ஜேபி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

இதில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் ஆர்வமுடன் பங்கு பெற்றனர். வில் வித்தை, இரண்டு வகையான கராத்தே, கிக் பாக்ஸிங், ரோல்பால், மால்கம்பம் மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டு வல்லுனர்கள் சிறப்பாக நடத்தினர்.  மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன் தலைமை தாங்கினார். ஆய்க்குடி ஜேபி பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஜெயராஜ் மற்றும் மனோகர் சாமுவேல் விளையாட்டு வழிகாட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ராமநாதன், ஜான்சன், கணபதி ராமன், மனோஜ், செல்வம், பிரதீப், ஆர்த்தி விநாயகம், சந்திரசேகர் ஆகியோர் செயல்பட்டனர். உடற்கல்வி ஆசிரியர் கணபதி ராமன் நன்றி தெரிவித்தார்

Tags:    

Similar News