தென்காசியில் அரசை கண்டித்து சுகாதார துறை ஆய்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் பொதுசுகாதாரத்துறை அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-12-01 01:33 GMT

தென்காசியில் பொதுசுகாதாரத்துறை அனைத்து சங்ககூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை கண்டித்து பொது சுகாதாரத் துறை மாநிலத் தலைவர் கங்காதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட சுகாதார ஆய்வாளர்களை பணியிலிருந்து விடுவிக்க உத்தரவிட்ட தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது

தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2448 சுகாதார ஆய்வாளர்களை எடுக்கும் போது ஏற்கனவே பணிபுரிந்த 1646 சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்ய இருக்கின்ற சுகாதார ஆய்வாளர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும் 9 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளர் நிலை 2அவர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பதை கண்டித்தும் மற்றும் அதனைத் தொடர்ந்து விரைவில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்று உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News