குற்றாலத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

Committee Meeting - குற்றாலத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-29 02:19 GMT

குற்றாலத்தில் விவசாய இடுபொருள் விற்பனையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்நடந்தது.

Committee Meeting - தென்காசி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா குற்றாலம் கே. ஆர். ரிசார்ட்டில் வைத்து நடந்தது. விழாவிற்கு விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் மோகன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட துணை செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ஜே.பி.ஜெயபிரகாஷ், இஸ்மாயில், பூசைத்துரை ஆர்.டி.வி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் காமாட்சி ராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி வேளாண்மை துணை இயக்குனர் தா. தமிழ் மலர், தென்காசி மாவட்ட மத்திய மாநில திட்ட வேளாண்மை இணை இயக்குனர் ந.க. நல்ல முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்ட சங்கத்தின் புதிய தலைவராக சக்கராஜா, செயலாளராக ராஜகுரு, பொருளாளராக முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழாவில் பல்வேறு விவசாய இடுபொருள் நிறுவனங்கள், சென்னை, டெடி எலக்ட்ரிக்கல் மொபட் நிறுவனம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக தமிழ்நாடு விவசாய இடுபொருட்கள் வியாபாரிகள் சங்க நிறுவனர் மறைந்த ஐயா ரெங்கசாமி உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் துணைத் தலைவர் ஆறுமுகசாமி நன்றி கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News