தென்காசியில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணிகளை திமுக மாவட்ட செயலாளர் ஆய்வு

தென்காசியில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆய்வு செய்தார்.

Update: 2021-12-09 02:26 GMT

தென்காசியில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கட்டப்பட இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திமுக சார்பில் வழக்கு தொடர்ந்து மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் புதிய பேருந்து நிலையம் அருகில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கட்டிடம் கட்ட உத்தரவிட்டது.

இன்று ஏழடுக்கு கட்டடமாக எழும்ப இருக்கிற மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐந்து அடுக்கு கட்டட பணிகள் நடந்திருக்கிறது. இதனை மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன், நகரக் கழகச் செயலாளர் சாதீர்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் சீனித்திரை, அழகுசுந்தரம் ,ஆகியோர் சென்று கட்டிடப் பணி நடைபெறுவதை பார்வையிட்டார்கள்.

நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறுவதற்கு உறுதுணையாக இருந்து திமுக சொன்ன இடத்தில் கட்டிடம் கட்ட இடத்தை தேர்வு செய்து தந்த தென்காசியில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த அருண் சுந்தர் தயாளன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News