28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க கோரிக்கை

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனு.

Update: 2022-05-24 04:45 GMT

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசிடம் வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் நீண்ட ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்தவர்கள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசும் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறையில் இருக்கும் 700 ஆயுள் தண்டனை கைதிகள் மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசாணை வெளியிட்டு இருந்தது.

அந்த வகையில் மத பாரபட்சம் பார்க்காமல் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் 38 இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News