அரசு மருத்துவமனை- நோய் தடுப்பு உபகரணங்களை தென்காசி எம்எல்ஏ வழங்கினார்

முன்னாள் பாரதப் பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் உபகரணங்களை வழங்கினார்

Update: 2021-05-27 13:40 GMT

பாரத பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் மருத்துவ உபகரணங்களை வழங்கனார்

முன்னாள் பாரத பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சியின் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சுமார் 48 ஆயிரம் மதிப்புள்ள முக கவசங்கள், நீரிழவு நோய்க்கு தேவையான உபகரணங்களை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர்.ஜெஸ்லினிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சட்டநாதன், நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ், தேவேந்திரன், பிரபாகரன், அரவிந்த் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News