மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் குற்றால அருவியில் வெள்ளம்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-11-03 05:35 GMT

பலத்த மழையால் குற்றாலம் அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகின்றது. மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி,ஐந்தருவி,பழைய குற்றாலம் அருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மெயினருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி இரண்டாவது பாலத்தை ஒட்டி காட்டாற்று வெள்ளம் காட்டாற்று வெள்ளம் உருவாகி வனப்பகுதியில் இருந்து மரத்தடியிலும் அடித்து வரப்பட்டு உள்ளன.

மேலும் நடைபாதைகளும் சேதமடைந்துள்ளன தடுப்பு கம்பிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து வனப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழையால் சேதமடைந்த அருவி பகுதிகளில் பேரூராட்சி பணியாளர்கள் மழையால் சேதமடைந்த மண் மேடுகளை மற்றும் நடைபாதையில் குவிந்துகிடக்கும் மரக்கட்டைகள் டைல்ஸ் உள்ளிட்டவைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News