தென்காசி அருகே இலஞ்சியில் கார் டிரைவர் வீட்டின் அருகில் கொலை

தென்காசி அருகே இலஞ்சியில் கார் டிரைவர் வீட்டின் அருகில் கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Update: 2022-01-21 11:25 GMT

தென்காசி மாவட்டம் இலஞ்சியை அடுத்து உள்ள கீழே இலஞ்சியில் வசித்து வருபவர் சின்ன இசக்கி. இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 15 வயதில் 1 மகனும், 10 வயதில் 1 பெண் குழந்தையும் உள்ளது. இவருடைய மனைவி தென்காசியில் உள்ள ஒரு பாத்திர கடையில் பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டில் கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. இன்று இவரது வீட்டில் கான்கிரிட் பணி நடைபெற இருந்த நிலையில், இன்று காலை அவர் வீட்டின் முன் சின்ன இசக்கி கடுமையாக தாக்கப்பட்டு இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குற்றாலம் காவல் துறையினர் விரைந்து வந்து சின்ன இசக்கி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சின்ன இசக்கி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து குற்றாலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News